அவர்கள் எங்கள் வேதனையை அனுபவிக்கவேண்டும்

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இழப்பீட்டு தொகையை செலுத்த தவறியுள்ளமை தொடர்பில்  உயிர்த்தஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்கள் கடும் சீற்றம் வெளியிட்டுள்ளனர்.

தங்கள் கவனக்குறைவு அலட்சியத்தினால் உயிர்த்தஞாயிறு தாக்குதல்கள் இடம்பெறகாரணமாகயிருந்தவர்கள்  அது குறித்து எந்த கழிவிரக்கத்தையும் கவலையையும் வெளிப்படுத்தவில்லைஎன வெளிப்படுத்தவில்லை நீதிமன்றம் உத்தரவிட்டது போல இழப்பீட்டு தொகையை  வழங்க முன்வரவில்லை என உயிர்த்தஞாயிறு தாக்குதலால் பாதிக்கப்பட்டவர்கள்  கவலையும் ஆத்திரமும் வெளியிட்டுள்ளனர்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் உறவுகளை பலிகொடுத்த பல குடும்பத்தவர்கள்  தங்கள் உறவுகளிற்கு நீதிவழங்கவேண்டும் என மீண்டும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

 

நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் இவர்கள் இழப்பீட்டினை செலுத்தாதமை ஆச்சரியமளிக்கவில்லை அவர்கள் பல விடயங்களை அலட்சியம் செய்து பழகியவர்கள் என கட்டுவாப்பிட்டிய தேவாலயத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தவர்களின் நலன்புரிச்சங்கத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.

தாக்குதல் இடம்பெறலாம் என்ற பல எச்சரிக்கைகளை அலட்சியம் செய்தவர்கள் இவ்வாறு நீதிமன்றத்தின் உத்தரவை அலட்சியம் செய்வது பெரியவிடயமில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

நாங்கள் எங்கள் அன்புக்குரியவர்களை மீளப்பெறப்போவதில்லை ,ஆனால் இதற்கு காரணமானவர்கள் தங்கள் அலட்சியத்திற்கான விலையை செலுத்தவேண்டும்என தனது குடும்ப உறுப்பினர் ஒருவரை இழந்த லெஸ்லிஎன்பவர்  தெரிவித்துள்ளார்.

அவர்கள் செலுத்தவேண்டிய பெருந்தொகையாவது அவர்களுக்கு வேதனையை ஏற்படுத்தட்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

தங்களுக்கும் உயிர்த்தஞாயிறுதாக்குதலிற்கும் எந்த தொடர்பும் இல்லை என்பது போலஇந்த அரசியல்வாதிகள்நடந்துகொள்கின்றனர் இது கடும் வெறுப்பை ஏற்படுத்துகின்றது என உயிர்த்தஞாயிறு தாக்குதலில் தனது தந்தையை  இழந்த சுடாரா பெர்ணாண்டோ தெரிவித்துள்ளார்.

எனக்கு தந்தை மீண்டும் கிடைக்கப்போவதில்லை எங்களுக்கு இந்த பணம் தேவையில்லை ஆனால் இதற்கு காரணமானவர்கள் நாங்கள் எதிர்கொள்ளும் இந்த வேதனையை அனுபவிக்கவேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்..

தனது கணவர் டென்சில் பெர்ணான்டோவை இழந்த டபில்யூபீஏடபில்யூ பெரேரா கண்ணீருடன் தனது கருத்தினை இவ்வாறு தெரிவித்தார்.

எனது நேசத்திற்குரிய கணவரின் மரணத்திற்கு காரணமானவர்களின் ஒரு சதம் கூட எங்களுக்கு தேவையில்லை,நான் அவர்கள் குறித்து வெட்கப்படுகின்றேன் அவர்களின் பெயர்களை கூட கேட்கவிரும்பவில்லை என அவர் தெரிவித்தார்.