இலங்கை கடற்படையினர், மன்னாரின் தெற்கு கடல் பகுதியில் புதன்கிழமை (4) காலை நடத்திய தேடுதல் நடவடிக்கையின்போது, சட்டவிரோதமாக இரவு நேர சுழியோடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட 4 பேரை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.
அவர்களிடமிருந்து 437 கடல் அட்டைகள், ஒரு டிங்கி படகு, சுழியோடி உபகரணங்களை கடற்படையினர் கைப்பற்றினர்.
அதன்படி, மன்னார் தெற்கு பகுதிக்கு அப்பால் உள்ள கடல் பகுதியில், வட மத்திய கடற்படை கட்டளைக்கு சொந்தமான இலங்கை கடற்படை கப்பலா கஜபா நடத்திய இந்த சிறப்பு தேடுதல் நடவடிக்கையின்போது, சந்தேகத்திற்கிடமான ஒரு டிங்கி படகு பரிசோதிக்கப்பட்டது.
இந்த நடவடிக்கையின் மூலம் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் மன்னார் பகுதியைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இவர்கள் 32 முதல் 48 வயதுக்குட்பட்டவர்கள் எனவும் சந்தேக நபர்களும் கைப்பற்றப்பட்ட பொருட்கள் அனைத்தும் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக மன்னார் மீன்வள ஆய்வாளரிடம் ஒப்படைக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.








