இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவுக்கான நியமனம் தொடர்பில் ஜீவன் தொண்டமான், சாணக்கியன், தயாசிறி ஜயசேகர சபையில் எதிர்ப்பு!

இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவுக்கான அரச நியமனத்தை எதிர்த்து, எதிர்க்கட்சியைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்களான ஜீவன் தொண்டமான், சாணக்கியன், தயாசிறி ஜயசேகர ஆகியோர் இன்று (7) நடைபெற்ற பாராளுமன்ற அமர்வில் கடும் கண்டனங்களை பதிவு செய்திருந்தனர்.

அரசாங்கத்தினால் அண்மையில் வழங்கப்பட்ட இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் புதிய பணிப்பாளர் நாயகத்தின் நியமனம் குறித்து கேள்வி எழுப்பிய உறுப்பினர்கள் இந்நியமனம் சுதந்திரத்தையும் நியாயத்தையும் புறக்கணிப்பதாக குற்றஞ்சாட்டினர்.

மேலும், எதிர்க்கட்சியைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்களான ஜீவன் தொண்டமான், சாணக்கியன், தயாசிறி ஜயசேகர ஆகியோர் கருத்து தெரிவித்தபோதிலும், எதிர்க்கட்சியைச் சேர்ந்த ஏனைய உறுப்பினர்கள் மௌனமாக இருந்தனர்.

இது தொடர்பில் பாராளுமன்றத்தில் இன்று நடைபெற்ற விவாதம் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.