ஈழத்தின் மூத்த பத்திரிகையாளர் பாரதி இராஜநாயகத்தின் முதலாம் ஆண்டு நினைவு வணக்கம்

பத்திரிகைத்துறையின் மூத்த ஆசிரியர் பாரதி இராஜநாயகம் அமரத்துவம் அடைந்த ஓராண்டு நினைவு வணக்கக் கூட்டம், யாழ் நகரில் உள்ள ராஜா கிறீம் ஹவுஸ் மண்டபத்தில், இன்று 7 ஆம் திகதி சனிக்கிழமை பகல் 9.30 இல் இருந்து நண்பகல் 1 மணி வரை நடைபெற்றது.

மூத்த பத்திரிகையாளர் தேவகௌரி தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் , “சமகால அரசியலும் பாரதியின் அரசியல் கட்டுரைகள் மற்றும் பத்திரிகைத்துறை செயற்பாடுகளும்” என்ற தலைப்பில் சிரேஷ்ட ஊடகவியலாளர் அ. நிக்சன் சிறப்புரை ஆற்றினார்.

யாழ் பல்கலைகழக ஊடகத்துறைப் பேராசிரியர் எஸ்.ரகுராம், டான் ஊடக குழுமத்தின் தலைவர் மூத்த பத்திகையாளர் குகநாதன் ஆகியோர் உள்ளிட்ட பலர் உரையாற்றினர்.