காலி தேசிய வைத்தியசாலையின் பிரதான நுழைவாயிலுக்கு முன்பாக இன்று வியாழக்கிழமை (20) காலை ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக காலிகாவல் துறையினர் தெரிவித்தனர்.
சடலமாக மீட்கப்பட்டவர் வைத்தியசாலையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர் என வைத்திசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இது தொடர்பில் காலி காவல் துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.





