இன்று கொழும்பில் காலி முகத்திடலில் 5,000 கலைஞர்கள் பங்கேற்ற பரதநாட்டிய நிகழ்வு உலக சாதனையாக அரங்கேறியது.
இந்தியாவைச் சேர்ந்த ‘சங்கமம் குளோபல் அகடமி’ மற்றும் இலங்கையின் ‘சங்கமிழ் லியா ஹொலிடேஸ்’ ஆகிய நிறுவனங்கள் இணைந்து இந்த மாபெரும் உலக சாதனை நிகழ்வை ஏற்பாடு செய்துள்ளது . உலகின் மிகப்பெரிய பரதநாட்டியப் பயிற்சிக்கான கின்னஸ் உலகச் சாதனை முயற்சியாக இது அறிவிக்கப்பட்டுள்ளது .






