கிளிநொச்சி மாவட்டத்தில் கடந்த வருடத்தில் 423 வியாபார நிலையங்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை

கிளிநொச்சி மாவட்டத்தில் கடந்த வருடத்தில் 423 வியாபார நிலையங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையின்  கிளிநொச்சி மாவட்ட இணைப்பாளர் ச.நிலாந்தன்  தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் குறிப்பிடுகையில்,

கடந்த வருடம் 2023 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் டிசம்பர் மாதம் வரையான காலப்பகுதியில்  கிளிநொச்சி மாவட்ட பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையின் சாதராண நடவடிக்கைளின் போதும்  கிடைக்கப்பெற்ற  முறைப்பாடுகளின் அடிப்படையிலும் கிளிநொச்சி மாவட்டத்தின்  நான்கு  பிரதேச செயலாளர் பிரிவுகளையும் உள்ளடக்கிய வகையில் 423 வியாபார நிறுவனங்களின் மற்றும் உற்பத்தி நிறுவனங்களுக்கு  எதிராக வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

காலாவதியான பொருட்களை  விற்பனை செய்தமை,  கட்டுப்பாட்டு விலைகளை விட அதிகூடிய விலைகளிலே பொருட்களை விற்பனை செய்தமை, விலைப்பட்டியல் காட்சிப்படுத்தப்படாமை, பொருட்களின் விலைகளில் மாற்றங்களைச் செய்து விற்பனை செய்தமை, அனுமதிக்கப்படாத முகப்பூச்சு கிரீம்களை விற்பனை செய்தமை, விற்பனைக்காகக் காட்சிப்படுத்தியமை, எடை குறைந்த பாண் விற்பனை செய்தமைக்காக காட்சிப்படுத்தியமை, முத்திரையிடப்படாத இலத்திரனியல் பொருட்களை விற்பனை செய்தமை என பல்வேறு குற்றச்சாட்டுகளின் கீழ் 423 பேருக்கு எதிராக வழக்குப் பதிவு செய்யப்பட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு கடந்த வருடத்தில் நிலுவையாக இருந்த வழக்குகள் உட்பட  433 வழக்குகளுக்குச் சட்ட நடவடிக்கைகளின் பின்னர் ரூபா 323,000.00 (முப்பத்தைந்து இலட்சத்து இருபத்து மூன்றாயிரம் ரூபா) நீதிமன்றால் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.

பாவனையாளர்கள் பொதுமக்கள் இது தொடர்பான முறைப்பாடுகளை தங்களுக்கு நேரடியாகவோ அல்லது 1977 என்ற இலக்கத்தின் ஊடாகவோ முறைப்பாடுகளைச் செய்யலாம் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.