குற்றப் புலனாய்வு திணைக்களம் தமக்கு விருப்பமான நீதிமன்றத்தை தெரிவு செய்ய முடியாது!

பௌத்த மதம் உட்பட ஏனைய மதங்களை அவமதிக்கும் வகையில் கருத்து வெளியிட்ட குற்றச்சாட்டின்பேரில் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள போதகர் ஜெரோம் பெர்னாண்டோவுக்கு எதிரான வழக்கு விசாரணையின்போது கொழும்பு கோட்டை நீதிவான் திறந்த நீதிமன்றத்தில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தைக் குற்றஞ்சாட்டினார்.

பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் ஜெரோம் பெர்னாண்டோவுக்கு எதிரான விசாரணை தொடர்பான முறைப்பாடு குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கல்கிஸை நீதிவான் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

குற்றப் புலனாய்வு திணைக்களம் தமக்கு விருப்பமான நீதிமன்றத்தை தெரிவு செய்ய முடியாது என கோட்டை நீதிவான் திறந்த நீதிமன்றில் குற்றம் சுமத்தியுள்ளார்

இந்த  வழக்கு விசாரணை இன்று (07) கொழும்பு கோட்டை நீதிவான்  திலின கமகே முன்னிலையில் அழைக்கப்பட்டபோது, பிணையில் விடுவிக்கப்பட்ட ஆயர் ஜெரோம் பெர்னாண்டோவும் நீதிமன்றில் ஆஜராகியிருந்தார்.

இங்கு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் நீதிமன்றில் சாட்சியமளித்ததுடன், இச்சம்பவம் தொடர்பான காணொளிக் காட்சிகள் தொடர்பில் மேலதிக விசாரணைகள் நடத்தப்படும் எனவும் தெரிவித்தனர்.