சந்நிதியான் ஆச்சிரமத்தால் ஒட்டுசுட்டானில் 46 அறநெறிப் பாடசாலை மாணவர்களுக்குப் புதிய சீருடைகள் கையளிப்பு

ஒட்டுசுட்டான் முத்துஐயன்கட்டு ஜீவநகர் ஶ்ரீ முத்துமாரி அம்மன் அறநெறிப் பாடசாலையைச் சேர்ந்த 46 மாணவர்களுக்கு மொத்தமாக 80,500 ரூபா பெறுமதியான புதிய சீருடைகள் சந்நிதியான் ஆச்சிரம நிர்வாகத்தால் இன்று ஞாயிற்றுக்கிழமை (05.04.2026) முற்பகல் கையளிக்கப்பட்டுள்ளன.