சிறை கைதிகளால் செய்கை செய்யப்பட்ட நெற்பயிர் காட்டு யானையால் நாசம்

மட்டக்களப்பு சிறைச்சாலையிலுள்ள சிறை கைதிகளினால் செய்கை பண்ணப்பட்டு அறுவடைக்கு தயாரான நிலையிலிருந்த மூன்று ஏக்கர் நிலப்பரப்பில் செய்கை பண்ணப்பட்ட வேளாண்மை நள்ளிரவில் உட்புகுந்த காட்டு யானையினால் முற்றாக அளிக்கப்பட்டு நாசமாக்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு சிறைச்சாலையின் திறந்த வெளிச் சிறைச்சாலை பொறுப்பதிகாரி திலிப் பிரான்சிஸ் தெரிவித்தார்

மட்டக்களப்பு விமான நிலையத்துக்கு பின்னால் உள்ள திருப்பெருந்துறை திறந்தவெளி சிறைச்சாலை காணியில் மேற்படி வேளாண்மை செய்கை பணாணப்பட்டிருந்தது.

வேளாண்மை செய்கை அறுவடைக்கு தயாராக இருந்த நிலையில் நள்ளிரவில் உப்புகுந்த காட்டு யானை வேளாண்மைச் செய்கையை அளித்துவிட்டு சென்றுள்ளதாக பொறுப்பதிகாரி மேலும் தெரிவித்தார்.

குறித்த யானையை விரட்டுவதற்காக யானை வெடிகளை கொளுத்தியும் டயர்களை போட்டு எரித்தும் விரட்டிய போதும் யானை மீண்டும் மீண்டும் வந்து வேளாண்மைச் செய்கைகளை அளித்ததாக தெரிவிக்கப்படுகிறது.