யாழ் நீரிழிவுக் கழகத்தின் பத்தாவது ஆண்டுப் பூர்த்தியை முன்னிட்டு யாழ் நீரிழிவுக் கழகம் வலிகாமம் தெற்குப் பிரதேச சபையின் அனுசரணையுடன் நடாத்திய இலவச நீரிழிவுப் பரிசோதனை முகாம் சனிக்கிழமை (28.03.2026) காலை-09 மணி முதல் சுன்னாகம் பேருந்து நிலையத்தில் இடம்பெற்றது.
அகம் சுரக்கும் தொகுதியியல் சிறப்பு மருத்துவ நிபுணர் ஜெ.துளசிகா கலந்து கொண்டு நீரிழிவுப் பரிசோதனை முகாம் நிகழ்வை ஆரம்பித்து வைத்தார். இம் முகாமில் பல நோயாளிகளும் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.






