டொன்பிரியசாத் கொலை – சந்தேகநபர்களான தந்தைக்கும் மகனிற்கும் நீதிமன்றம் வெளிநாட்டு பயணத்தடை!

கொழும்பு வெல்லம்பிட்டி பகுதியில் டொன்பிரியசாத் படுகொலை செய்யப்பட்டமை தொடர்பில் சந்தேகநபர்கள் என கருதப்படும் இருவருக்கு கொழும்பு மேலதிக நீதவான் நீதிமன்றம் வெளிநாட்டு பயணத்தடை விதித்துள்ளது.

பந்துலபியால் என்;பவரும்  அவரது மகனான மாதவ சுதர்சனவும் வெளிநாடு செல்வதற்கு நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

இருவரும் வெல்லம்பிட்டியவை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

சந்தேநபர்களுக்கும் கொலை செய்யப்பட்ட நபருக்கும் இடையில் நீண்டகாலமாக காணப்பட்ட தகராறே இந்த கொலைக்கு காரணமாகயிருக்கலாம் என்ற தகவல் விசாரணைகளின் போது தெரியவந்துள்ளதாக பொலிஸார் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.

இதனடிப்படையில் சந்தேகநபர்கள் நாட்டிலிருந்து  தப்பியோடுவதை தடுக்கவேண்டும் என பொலிஸார் நீதிமன்றத்தில் வேண்டுகோள் விடுத்தனர்.

லக்சத செவன வீடமைப்பு திட்டத்தில் சம்பவம் இடம்பெற்றவேளை காணப்பட்ட நபர்களிடம் வாக்குமூலத்தை பெற்றுக்கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.