நாளை நடைமுறை பரீட்சை ஆரம்பம்

2022ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சையின் உயிர் முறைமைகள் தொழிநுட்பவியல் (பயோ சிஸ்டம்ஸ் டெக்னோலஜி) நடைமுறைப் பரீட்சைகள், நாளை சனிக்கிழமை (05) ஆரம்பமாகவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

ஓகஸ்ட் 5, 6 மற்றும் 7 ஆம் திகதிகளில் நாடளாவிய ரீதியில் உள்ள 77 நிலையங்களில் நடைமுறைப் பரீட்சைகள் நடைபெறவுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்தார்.

பாடசாலை விண்ணப்பதாரிகளுக்கான அனுமதி அட்டைகள் குறித்த அதிபர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும்,  தனிப்பட்ட பரீட்சார்த்திகள் அவற்றை தபால் மூலம் அவர்களது. தனிப்பட்ட முகவரிக்கு பெற்றுக் கொள்ளமுடியும் என்றும் பரீட்சைகள் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

மாணவர்கள் https://onlineexams.gov.lk/ என்ற இணையத்தளத்துக்குச் சென்று அனுமதி அட்டைகளைப் பதிவிறக்கம் செய்ய முடியும் எனவும் திணைக்களம் தெரிவித்துள்ளது.

பரீட்சை தொடர்பான தெளிவுபடுத்தல்கள் அல்லது தகவல்களுக்கு மாணவர்கள் 1911 என்ற தொலைபேசி இலக்கத்தினூடாகவோ அல்லது 0112 784 208, 0112 784 537, 0112 786 616 அல்லது 0112 785 922 என்ற தொலைபேசி இலக்கங்களினூடாக அதிகாரிகளை தொடர்பு கொள்ள முடியும் என திணைக்களம் மேலும் குறிப்பிட்டுள்ளது.