அரலகங்வில – கந்தேகம பகுதியில் நீர் நிரம்பிய குழியில் விழுந்து குழந்தையொன்று உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
நேற்று சனிக்கிழமை (20) காலை இந்த சம்பவம் பதிவாகியுள்ளது.
கந்தேகம, தம்மின்ன பகுதியைச் சேர்ந்த 02 வயதுடைய குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது.
சடலம் அரலகங்வில வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், அரலகங்வில பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.




