பூந் தண்டிகையில் மாவிட்டபுரம் கந்தன் உலா

வரலாற்றுச் சிறப்பு மிக்க மாவிட்டபுரம் ஸ்ரீ கந்தசுவாமி ஆலய மஹா கும்பாபிஷேக முதலாம் ஆண்டுப் பூர்த்தி தினத்தை முன்னிட்டுப் பங்குனி உத்தர நாளான  புதன்கிழமை(01.04.2026) 1008 சங்காபிஷேக உற்சவமும் திருக்கல்யாண வைபவமும் சிறப்பாக இடம்பெற்றது.
வசந்தமண்டபப் பூஜை வழிபாடுகளைத் தொடர்ந்து பூந்தண்டிகையில் வள்ளி- தெய்வயானை சமேத முருகப் பெருமான், விநாயகப் பெருமான், சிவன் சமேத அம்மன் ஆகிய தெய்வங்கள் உலா வந்தனர்.