பொத்துவில் கனகர் மீள்குடியேற்ற கிராமத்தில் புதிய வீடுகள் திறப்பு!

பொத்துவில் 60ஆம் கட்டை கனகர் மீள்குடியேற்ற கிராமத்தில் அமரர் கலாநிதி சதாசிவம் மகேஸ்வரன் நம்பிக்கை நிதியத்தின் தாராள நிதிப்பங்களிப்புடன் நிர்மாணிக்கப்பட்ட  குடியிருப்பு வீடுகளை திறந்து வைக்கும் நிகழ்வு இன்று புதன்கிழமை (25)  காலை 9.30 மணியளவில் பொத்துவில் கனகர் மீள்குடியேற்ற கிராமத்தில் நடைபெற்றதையும் அரசியல் பிரமுகர்கள் கலந்துகொண்டதையும் படங்களில் காணலாம்.