மத்திய கிழக்கு போர் பதற்றம் : இலங்கையர்களுக்கு அவசர வசதிகளை வழங்குவதற்காக தூதரகங்களுக்கு நிதி ஒதுக்கீடு

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் போர் பதற்ற  நிலைமைகள் காரணமாக, அங்கு வசிக்கும் இலங்கையர்களுக்கு அவசர வசதிகளை வழங்குவதற்காக தூதரகங்களுக்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

இலங்கையர்கள் வேலைவாய்ப்புக்காக மத்திய கிழக்கு நாடுகளுக்குச் செல்வது தடையின்றித் தொடர்வதாகவும் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் தலைவர் கோஷல விக்கிரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.