மஹரம புற்றுநோய் வைத்தியசாலையில் மிகவும் மெதுவாக பணிபுரியும் கதிரியக்க தொழில்நுட்பவியலாளர்கள்

மஹரகம அபேக்சா வைத்தியசாலையின் கதிரியக்க பிரிவின் கதிரியக்க நிபுணர்கள் மிகவும் மெதுவாக பணி செய்வதாகவும் இதன் காரணமாக நோயாளர்கள் பாதிக்கப்படும் சூழ்நிலை காணப்படுவதாகவும் விமர்சனங்கள் வெளியாகியுள்ளன.

கதிரியக்க நிபுணர்களின் அசமந்த போக்கினால்  490க்கும் மேற்பட்ட நோயாளிகள் காத்திருக்கின்றனர் இவர்களில் அவசரமாக சிகிச்சை தேவைப்படுபவர்களும் உள்ளனர் என  தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஒருநாள் தாமதம் கூட நிலைமையை குணப்படுத்த முடியாததாக மாற்றும் உயிரை காப்பாற்ற முடியாததாக மாற்றிவிடும் என புற்றுநோயியல் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

முன்னர் மணித்தியாலத்திற்கு 8 முதல் 10 நோயாளிகளிற்கு சிகிச்சைவழங்கப்பட்டதாகவும் தொழில்நுட்பவியலாளர்களின் திறமையின்மை காரணமாக தற்போதுமணித்தியாலத்திற்கு நான்கு அல்லது ஐந்து பேருக்கு மாத்திரம் சிகிச்சை வழங்கமுடிவதாகவும  நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

கதிரியக்க தொழில்நுட்பவியலாளர்களின் நடவடிக்கையை  கண்டித்துள்ள  மருத்துவர்கள் அதிகாரிகள் உடனடியாக தலையிட்டு இதற்கு தீர்வை காணவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளனர்.