மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்த இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா 22ஆம் திகதி செவ்வாய்க்கிழைமை மாலை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்துள்ளார்.

குறித்த சந்திப்பானது கொழும்பு விஜேராம மாவத்தையில் உள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா மரியாதை நிமித்தமாக சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.