மாதகலில் மழலைகளின் திறன் வெளிப்பாட்டு விழா

மாதகல் புனித தோமையார் முன்பள்ளி மழலைகளின் திறன் வெளிப்பாட்டு விழா  வியாழக்கிழமை (25.07.2024) மாலை-03 மணியளவில் மாதகல் புனித தோமையார் ஆலய முன்றலில் மாதகல் பங்குத்தந்தை அருட்தந்தை எஸ்.றோய் பேடினன் அடிகளார் தலைமையில் நடைபெறவுள்ளது.

நிகழ்வில் பிரான்ஸ் மாதகல் புனித தோமையார் ஒன்றியத்தின் செயலாளர் திருமதி.அகஸ்ரின் மேரி பற்றிசியா பிரதம விருந்தினராகக் கலந்து கொள்ளவுள்ளார்.