யாழ்.மாவட்ட அரசாங்க அதிபராகக் கடமையாற்றிப் பின்னர் பதவி உயர்வு பெற்றுச் சென்று தற்போது நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சின் மேலதிகச் செயலாளராகவும், தேசிய ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டுச் செயலகத்தின் பணிப்பாளர் நாயகமாகவும் கடமையாற்றிய கணபதிப்பிள்ளை மகேசன் வெள்ளிக்கிழமையுடன் (17.10.2025) அரசாங்க சேவையிலிருந்து ஓய்வு பெற்றுள்ளார்.
தேசிய ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டுச் செயலகத்தில் வெள்ளிக்கிழமை (17) அவருக்கான சேவை நயப்பு விழா சிறப்பாக இடம்பெற்றது.