யாழில் இரத்த வெள்ளத்தில் மீட்கப்பட்டது முதலை

யாழ்ப்பாணத்தில், பருத்தித்துறை – மருதங்கேணி வீதியில் முதலை ஒன்று உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது.

குறித்த பகுதியில் உள்ள நீர் தேக்கத்தில் அதிகளவான முதலைகள் காணப்படும் நிலையில் , அவை இரவு வேளைகளில் வீதியோரங்களில் நடமாடி வருகின்றன.

அவ்வாறு வீதியில் நடமாடிய வேளையிலையே வீதியில் சென்ற கனரக வாகனம் முதலை மீதேறியதில் முதலை உயிரிழந்து இருக்கலாம் என தெரிவிக்கப்படுறது.