யாழ்.கொழும்புத்துறையில் விபத்து! இருவர் பலி

யாழ்ப்பாணம்- கொழும்புத்துறை பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

குறித்த விபத்தானது இன்று(16.3.2026) கொழும்புத்துறை துண்டிச்சந்தி பகுதியில் இடம்பெற்றுள்ளது.

சகோதரர்களான இருவரும் மோட்டார் சைக்கிளில் பயணித்த போது, பவுசருடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளனர்.

விபத்தில் மணியந்தோட்டம் பகுதியை சேர்ந்த சகோதரர்கள் இருவர் உயிரிழந்துள்ளனர்.விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை யாழ்ப்பாயம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.