தற்போதைய அரசாங்கம் உழைக்கும் மக்களை தொடர்ச்சியாக ஒடுக்குவதுடன், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் திட்டங்களையே அநுர குமார திஸாநாயக்க நடைமுறைப்படுத்தி வருவதாக சர்வஜன அதிகார கட்சியின் தலைவர் திலித் ஜயவீர தெரிவித்தார்.
கொழும்பு திம்பிரிகஸ்யாய எட்வர்ட் ஹென்றி மைதானத்தில் இன்று (01) வெள்ளிக்கிழமை நடைபெற்ற மே தினப்பேரணியில் உரையாற்றிய போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.





