வடக்கு மாகாணக் கூட்டுறவு ஊழியர் ஆணைக் குழுவின் புதிய தலைவராகப் பிரகாஸ் நியமனம்

வடக்கு மாகாணக் கூட்டுறவு ஊழியர் ஆணைக் குழுவின் புதிய தலைவராக காராளசிங்கம் பிரகாஸ் வடக்கு மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகனால் இன்று திங்கட்கிழமை (09.02.2026) நியமிக்கப்பட்டுள்ளார்.
இவர் ஜேவிபியின் தொழிற்சங்கமான இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின்  நிர்வாகிகளில் ஒருவர் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.