வாதுவை கடற்கரை பகுதியில் ஒருவர் சடலமாக மீட்பு!

வாதுவை கடற்கரை பகுதியில் நபரொருவர் நேற்று (6) மாலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

உயிரிழந்தவர்  40 முதல் 50 வயதுக்குட்பட்டவர் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

குறித்த சடலமானது பாணந்துறை ஆதார வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வாதுவை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.