எங்கள் காணிகள் எமக்கு வேண்டும்!, எங்கள் உரிமை எமக்கு வேண்டும்! என வலியுறுத்தி அடுத்த மாதம்- 02 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை முற்பகல்-10 மணி முதல் யாழ்.வயாவிளான் சந்தியில் பாரிய ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்படவுள்ளது.

வயாவிளானைச் சேர்ந்த அனைத்து மக்களையும் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ளுமாறு ஆர்ப்பாட்ட ஏற்பாட்டாளர்கள் கேட்டுள்ளனர். மேலதிக தகவல்களுக்கு 0740290311 எனும் தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொள்ளுமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.