யாழ்.சுழிபுரம் விக்ரோறியாக் கல்லூரியின் 150 ஆவது ஆண்டு விழாவை முன்னிட்டு இரத்ததான முகாமும் மருத்துவ முகாமும் வியாழக்கிழமை(23.07.2026) காலை-09 மணி முதல் மேற்படி கல்லூரியின் பிரதான மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
சுழிபுரம் விக்ரோறியாக் கல்லூரிச் சமூகத்தின் ஏற்பாட்டில் கல்லூரியின் 1997 சாதாரணதர அணியினர், 2000 ஆம் ஆண்டு உயர்தர அணியினரின் முழுமையான அனுசரணையில் நடைபெறவுள்ள இரத்ததான முகாம் நிகழ்வில் இரத்ததானம் வழங்க விரும்பும் அனைத்துக் குருதிக் கொடையாளர்களையும், ஆர்வலர்களையும், மருத்துவ ஆலோசனை பெற விரும்புவோரையும் பங்குபற்றிப் பயன்பெறுமாறு கல்லூரி அதிபர் அழைப்பு விடுத்துள்ளார்.