எரிபொருள் விநியோகத்துக்காக தற்போது பயன்படுத்தப்பட்டு வரும் கியூ.ஆர் குறியீட்டு முறையை நீக்குவது குறித்து மேலும் விரிவாக ஆராய்ந்து வருவதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் டி.ஜே. ராஜகருணா, உலக சந்தையில் எரிபொருள் விலைகள் அதிகரித்த வேகத்துக்கு இணையாக, தற்போதைய விலைக் குறைப்புக்கள் இடம்பெறவில்லை என்று சுட்டிக்காட்டினார்.
இதேவேளை, எரிபொருளை பெற்றுக்கொள்வதில் தற்போது எவ்வித தடையோ அல்லது தட்டுப்பாடோ இல்லை என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.