சந்நிதியான் ஆச்சிரம சைவ கலை பண்பாட்டுப் பேரவையின் ஏற்பாட்டில் வாராந்த நிகழ்வாக ஞானச்சுடர் சஞ்சிகையின் 339 ஆவது பங்குனி மாத இதழ் வெளியீட்டு நிகழ்வு வெள்ளிக்கிழமை (27.03.2026) முற்பகல்-10.30 மணி முதல் தொண்டைமானாறு சந்நிதியான் ஆச்சிரம மண்டபத்தில் நடைபெற்றது.

இந் நிகழ்வில் ஓய்வுநிலை அதிபர் வ.கணேசமூர்த்தி மலரின் வெளியீட்டுரையையும், ஓய்வுநிலை அதிபரும், சைவப் புலவருமான செ.பரமேஸ்வரன் மலரின் மதிப்பீட்டுரையையும் நிகழ்த்தினர். அதனைத் தொடர்ந்து சிறப்புப் பிரதிகள் வழங்கப்பட்டன.