நயினாதீவுப் பிரதேச வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவுக்கான புதிய காற்றுச் சீரமைப்பியை (Air Conditioners) நயினாதீவைச் சேர்ந்த சமூகச் செயற்பாட்டாளர்களான பாலசிங்கம் சந்தானலெட்சுமி தம்பதியினர் புதன்கிழமை (25.03.2026) மேற்படி வைத்தியசாலை நிர்வாகத்தினரிடம் நேரடியாகக் கையளித்துள்ளனர்.

அத்துடன் தமது சொந்த நிதியில் நயினாதீவுப் பிரதேச வைத்தியசாலைச் சூழலில் வாராந்தம் துப்புரவுப் பணிகளை மேற்கொள்ளவும் குறித்த தம்பதிகள் முன்வந்துள்ளனர்.