கோரிக்கை நிறைவேறும் வரை போராட்டம் தொடரும்: கிரஷர் உரிமையாளர்கள் சங்க தலைவர் தகவல்

பிர​தான கோரிக்கை நிறைவேறும் வரை போராட்​டம் தொடரும்’ என கிருஷ்ணகிரி மாவட்ட கிரஷர் உரிமை​யாளர்​கள் சங்​கத் தலை​வர் தெரி​வித்​துள்​ளார். கல் குவாரி​களில் வெட்டி எடுக்​கப்​படும் கற்​களுக்கு கனமீட்​டர் அடிப்​படை​யில் அரசுக்கு பணம் செலுத்​திய நிலை​யில், தற்​போது மெட்​ரிக் டன் அடிப்​படை​யில் பணம் செலுத்த வேண்டும். புதி​தாக கனிம நில​வரி செலுத்த வேண்​டும் என்பன உள்​ளிட்ட புதிய உத்​தர​வு​களை தமிழக அரசு பிறப்​பித்​துள்​ளது.

இந்த உத்​தர​வு​களை திரும்​பப்​பெறக் கோரி, தமிழகம் முழு​வதும் கிரஷர் உரிமை​யாளர்​கள் வேலைநிறுத்​தப் போராட்​டத்​தில் ஈடு​பட்​டுள்​ளனர். இந்​நிலை​யில், கிருஷ்ணகிரி மாவட்​டம் ஓசூர் அருகே கோனே ரிப்​பள்​ளி​யில் தமிழ்​நாடு குவாரி, கிரஷர் மற்​றும் லாரி உரிமை​யாளர்​கள் சங்​கம் மற்​றும் ஓசூர், கிருஷ்ணகிரி கிரஷர் ஓனர்ஸ் பெடரேஷன் சார்​பில் தொடர் கவன ஈர்ப்பு போராட்​டம் நேற்று 6-வது நாளாக நடை​பெற்​றது.

இதுதொடர்​பாக கிரஷர் உரிமையாளர்​கள் சங்​கத்​தின் மாவட்ட தலை​வர் சம்​பங்கி கூறிய​தாவது: எங்களின் 23 கோரிக்கை தொடர்​பாக​ 2 நாட்​களுக்கு முன்​னர் அமைச்​சர் துரை​முரு​கன் முன்​னிலை​யில் பேச்​சு​வார்த்தை நடந்​தது. அதில், மெட்​ரிக் டன் அடிப்​படை​யில் பணம் செலுத்​தும் முறை, புதி​தாக கனிம நிலவரி செலுத்த வேண்​டும் என்ற எங்களின் 2 பிர​தான கோரிக்கைகளைத் திரும்​பப்​பெற வேண்​டும் என்​பதை ஏற்​க​வில்லை. மற்ற 15 கோரிக்​கைகளை ஏற்​றனர்.

எங்​கள் பிர​தான கோரிக்கையை நிறைவேற்​றும் வரை வேலை நிறுத்தப் போராட்​டம் தொடரும். இதனால், தமிழகம் முழு​வதும் கட்​டு​மானப் பணி​கள் பாதிக்​கப்​பட்​டுள்​ளன. கிருஷ்ணகிரி மாவட்​டத்​தில்​தான் அரசுக்கு அதி​கப்​படி​யான உரிமைத் தொகை​யைச் செலுத்​துகிறோம். எனவே, எங்​களது கோரிக்​கைகளை கிருஷ்ணகிரி மாவட்​டத்​தில் உள்ள மக்​கள் பிர​தி​நி​தி​கள் சட்​டப்​பேர​வை​யில் பேச வேண்​டும். இவ்​வாறு அவர் கூறி​னார்.

இதுதொடர்​பாக பொது​மக்​கள் சிலர் கூறும்​போது, “கிரஷர் உரிமை​யாளர்​கள் வேலைநிறுத்​தம் காரண​மாக ஜல்லி மற்​றும் எம்​-​சாண்ட் தட்​டுப்​பாடு ஏற்​பட்​டுள்​ளது. இதனால், வீடு கட்​டும் பணிபாதிக்​கப்​பட்​டுள்​ளது. எம்​-​சாண்ட், ஜல்லி விற்​பனை செய்​யும் இடைத்​தரகர்​கள் விலையை இரு​மடங்கு உயர்த்தி விட்டனர். எனவே, தமிழக அரசு இப்​பிரச்​சினை​யில் தலை​யிட்டு வேலைநிறுத்​தப் போ​ராட்​டத்​தை முடிவுக்​குக்​ கொண்​டு வர வேண்​டும்​” என்​றனர்.