சட்​டப்பேரவை தேர்தலில் வைகோ போட்டி?

சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் மதி​முக பொதுச் செய​லா​ளர் வைகோ போட்​டி​யிட வேண்​டும் என்று கட்​சி​யினர் வலி​யுறுத்​துகின்​றனர். திமுக கூட்​ட​ணி​யில் மதி​முக​வுக்கு 4 தொகு​தி​கள் ஒதுக்​கப்​பட்​டுள்ள நிலை​யில் அவர்​களுக்கு விருப்​ப​மான 10 தொகு​தி​களின் பட்​டியலை திமுக​விடம் கொடுத்​துள்​ளனர்.

மேலும் ஒதுக்​கப்​பட்ட நான்கு தொகு​தி​களில் மூன்​றில் உதயசூரியன் சின்​னத்​தி​லும், ஒரு தொகு​தி​யில் தனி சின்​னத்​தி​லும் மதி​முக போட்​டி​யிட உள்​ளது. கட்​சி​யின் பதிவை பாது​காத்​துக் கொள்​வதற்​காக ஒரு தொகு​தி​யில் தனி சின்​னத்​தில் போட்​டி​யிட​வுள்​ள​தாக தெரிவிக்​கப்​பட்​டது.

இதன்​காரண​மாக தனி சின்​னத்​தில் போட்​டி​யிடும் தொகு​தி​யில் நிச்​ச​யம் வெற்றி பெற வேண்​டும் என்ற நிர்​பந்​த​மும் மதி​முக​வுக்கு உள்​ளது. எனவே, தனி சின்​னத்​தில் பிரபல​மான வேட்​பாளரை நிறுத்த வேண்​டும் என்றும் கட்​சி​யின் பொதுச்​செய​லா​ளர் வைகோ போட்​டி​யிட வேண்​டும் எனவும் பெரும்​பாலான மதி​முக​வினர் வலி​யுறுத்​தி​யுள்​ளதாகவும் இறுதி முடிவை வைகோ எடுப்பார் என்றும் கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர்.