தமிழக உள்துறைச் செயலர் மாற்றம்: மணிவாசனை நியமித்தது தேர்தல் ஆணையம்

தமிழக உள்​துறைச் செயல​ராக இருந்த தீரஜ்கு​மாரை மாற்​றி​விட்​டு, க.மணி​வாசனை புதிய உள்​துறைச் செயல​ராக நியமித்து தேர்​தல் ஆணை​யம் உத்​தர​விட்​டுள்​ளது. லஞ்ச ஒழிப்​புத் துறை டிஜிபி​யாக மீண்​டும் டேவிட்​சன் தேவாசிர்​வாதமே தொடர்​வ​தாக காவல் துறை வட்​டாரங்​கள் தெரி​வித்​தன.

தமிழக சட்​டப்​பேரவை தேர்​தலுக்​கான அறி​விப்பு கடந்த மார்ச் 15-ம் தேதி வெளி​யானது. அன்று முதல் தேர்​தல் நடத்தை விதி​கள் அமலுக்கு வந்​தன. தமிழகம் முழு​வதும் தொகுதி வாரி​யாக பறக்​கும் படைகள், நிலைக் கண்​காணிப்​புக் குழுக்​கள் அமைக்​கப்​பட்​டு, வாகன சோதனை, கண்​காணிப்பு பணி​கள் தீவிரப்​படுத்​தப்​பட்​டுள்​ளன.

இதுத​விர, தமிழகத்​துக்கு 250 கம்​பெனி துணை ராணுவப் படை​யும் ஒதுக்​கப்​பட்​டு, அவர்​களும் தொடர்ச்​சி​யாக தமிழகம் வந்​தவண்​ணம் உள்​ளனர். இறுதி வேட்​பாளர் பட்​டியல் வெளி​யிடப்​பட்​டு, அனைத்​துக் கட்​சி​யினரும் தீவிர பிரச்​சா​ரத்​தில் ஈடு​பட்​டுள்​ளனர்.

8 எஸ்.பி.க்கள் மாற்றம்: தேர்​தல் அறி​விப்பு வெளி​யான பிறகு, புகார்​கள் அடிப்​படை​யில் அரசுத் துறை அதி​காரி​கள் மாற்​றம் செய்​யப்​படு​வது வழக்​கம். அந்த வகை​யில், விருதுநகர், நாமக்​கல், கரூர் உட்பட 8 மாவட்ட எஸ்​.பி.க்​கள் ஏற்​கெனவே மாற்​றப்​பட்​டனர். பின்​னர், தவெக தலை​வர் விஜய் பிரச்​சா​ரத்​துக்கு அனு​மதி மறுத்​தது, காவல் துறை போதிய பாது​காப்பு வழங்​காதது குறித்து தேர்​தல் ஆணை​யத்​துக்கு புகார்​கள் சென்​றன.

புதிய டிஜிபி நியமனம்: இதையடுத்​து, கடந்த ஏப்​.2-ம் தேதி தமிழக காவல் துறை​யின் சட்​டம் – ஒழுங்கு டிஜிபி​யாக இருந்த ஜி.வெங்​கட​ராமன் மாற்​றப்​பட்​டு, அவருக்கு பதிலாக, சந்​தீப் ராய் ரத்​தோர் நியமிக்​கப்​பட்​டார்.

இதுத​விர, தாம்​பரம் காவல் ஆணை​யர் ஏ.அமல்​ராஜுக்கு பதிலாக சஞ்​சய்​கு​மார், மதுரை காவல் ஆணை​யர் ஜெ.லோக​நாதனுக்கு பதிலாக அபிஷேக் தீக்​‌ஷித் ஆகியோர் நியமிக்​கப்​பட்​டனர். மேற்கு மண்டல ஐ.ஜி.​யாக இருந்த சரவண சுந்​தர் மாற்​றப்​பட்டு ரம்யா பாரதி நியமிக்​கப்​பட்​டார். சேலம் ஆட்​சி​ய​ராக அருண் தம்​பு​ராஜ், தூத்​துக்​குடி ஆட்​சி​ய​ராக விசு மகாஜன் ஆகியோர் நியமிக்​கப்​பட்​டனர்.