இந்தியாவில் இராட்டினம் விழுந்து விபத்து : ஒருவர் உயிரிழப்பு ; 13 பேர் காயம்

இந்தியாவின் ஹரியானா மாநிலத்தில் நடைபெற்ற கண்காட்சியில் இராட்டினம் விழுந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

ஹரியானா மாநிலம், சூரஜ்குன்ட் கண்காட்சியில் சனிக்கிழமை (07) சுமார் 15 பேருடன்  இராட்டினம் திடீரென சரிந்து விழுந்து விபத்துக்குள்ளானது.

இந்த சம்பவத்தில் பணியில் இருந்த பொலிஸ் அதிகாரி ஒருவர் உயிரிழந்துள்ளதோடு, 13 பேர் காயமடைந்துள்ளனர்.

காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ள நிலையில் பொலிஸ் உயிரிழந்ததற்கு ஹரியானா முதலமைச்சர் நயாப் சைனி இரங்கல் தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகள்