வெள்ளை மாளிகையில் உக்ரேன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி, இன்று வெள்ளிக்கிழமை (17) அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்பை சந்தித்து கலந்துரையாடவுள்ளார்.
உக்ரேன், ரஷ்யா இடையிலான போர் சுமார் 3 ஆண்டுகளுக்கு மேலாக நீடித்து வருகிறது. போரை முடிவுக்கு கொண்டுவர அமெரிக்கா உள்பட பல்வேறு நாடுகள் முயற்சித்தன. ஆனால் போர் நிறுத்த பேச்சுவார்த்தைகள் அனைத்தும் தோல்வியில் முடிந்தன. இந்த போரால் உக்ரேன் நாட்டைச் சேர்ந்த லட்சக்கணக்கான மக்கள் தங்கள் வீடுகளை இழந்து அண்டை நாடுகளில் அகதிகளாக தஞ்சமடைந்துள்ளனர்.
இந்த சூழலில், உக்ரேன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி இன்றைய தினம் ஜனாதிபதி ட்ரம்ப்பை சந்தித்து கலந்துரையாடவுள்ளார். வொஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகையில் இந்த சந்திப்பு நடைபெற உள்ளது. இந்த சந்திப்பின்போது உக்ரேனின் பாதுகாப்பு, ஆற்றல் தேவைகள் மற்றும் ரஷ்யா மீதான தடைகளை அதிகரிப்பது உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.