சீன ஷிப்பிங் மற்றும் லாஜிஸ்டிக்ஸ் கூட்டு நிறுவனமான COSCO, மத்திய கிழக்கு வழித்தடங்களுக்கான கப்பல் போக்குவரத்தை நிறுத்தி வைத்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
அதன்படி, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், சவுதி அரேபியா, பஹ்ரைன், ஈராக் மற்றும் குவைத் உள்ளிட்ட மத்திய கிழக்கு பிராந்தியத்தில் உள்ள துறைமுகங்களுக்குச் செல்லும் மற்றும் வரும் வழித்தடங்களுக்கு இந்த இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளது.
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் மோதல்கள் அதிகரித்து வருவதாலும், ஹார்முஸ் ஜலசந்தி மூடப்பட்டதாலும் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக நிறுவனம் கூறுகிறது.





