அநுராதபுரம் மறைமாவட்டத்தின் 4 ஆவது ஆயராக நற்கருணை நாதர் சபையைச் சேர்ந்த அருட்தந்தை டொன் நிசாந்த சாகர ஜெயமன்ன அடிகளார் திருத்தந்தை 14 ஆம் லியோ ஆண்டகையினால் நியமிக்கப்பட்டுள்ளார்.
அருட்தந்தை டொன் நிசாந்த சாகர ஜெயமன்ன அடிகளார் நற்கருணை நாதர் சபையினை சேர்ந்தவர்.
கொழும்பு மறைமாவட்டத்தினை சேர்ந்த இவர் 1970 ஜூன் 25 போபிட்டியவில் பிறந்தார். இவர் 13.05.2000 இல் குருத்துவ அருட்பொழிவு பெற்று நற்கருணை நாதர் சபையில் நிதியாளர் மற்றும் பல உயர் பதவிகளையும் வகித்தவர்.
அது மட்டுமன்றி மாத்தளை ஹங்வெல்ல பகுதிகளில் உதவி பங்குத்தந்தையாகவும் கண்டி தேசிய குருமடத்தில் பேராசிரியராகவும் பின்னர் ஹங்வெல்ல பகுதியில் உள்ள தியான இல்லத்தின் இயக்குனராகவும் பணியாற்றியவர். பின்னர் நற்கருணை நாதர் சபையின் முதல்வர் பதவியினையும் வகித்தவர் தற்பொழுது ஆயராக திருத்தந்தையினால் நியமிக்கப்பட்டுள்ளார்.
![]()



