உலகின் தற்போது நிலவும் நிலைமை தொடர்பில் எதிர்க்கட்சி கொண்டு வரும் சபை ஒத்திவைப்பு பிரேரணை மீதான விவாதம் மார்ச் 19 மற்றும் 20ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளது.
நாளை மறுதினம் செவ்வாய்க்கிழமை மு.ப 9.30 மணி முதல் மு.ப 10 மணிவரை பாராளுமன்ற நிலையியற் கட்டளை 22(1) முதல் (6) வரையின் பிரகாரம் பாராளுமன்ற அலுவல்களுக்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. மு.ப 10 மணி முதல் மு.ப 11 மணிவரை வாய்மூல விடைக்கான கேள்விகளுக்காகவும், மு.ப 11 மணி முதல் மு.ப 11.30 மணி வரை நிலையியற் கட்டளை 27(2) கீழான கேள்விகளுக்காகவும் ஒதுக்கப்பட்டுள்ளது.
இதன் பின்னர் மு.ப 11.30 மணி முதல் பி.ப 5 மணிவரை ஊழல் எதிர்ப்புச் சட்டத்தின் கீழ் இலஞ்சம் அல்லது ஊழல் சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவின் அலுவலர்களுக்கும் ஊழியர்களுக்குமான ஊதியம் மற்றும் சேவை நிபந்தனைகளை தீர்மானித்தல் குறித்த விவாதம்இடம்பெற்று அங்கீகரிக்கப்படவுள்ளது.
இதனைத் தொடர்ந்து பி.ப 5 மணி முதல் பி.ப 5.30 மணி வரை அரசாங்கக் கட்சியினால்கொண்டுவரப்படும் ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணைக்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.
18ஆம் திகதி புதன்கிழமை மு.ப 9.30 மணி முதல் மு.ப 10 மணிவரை பாராளுமன்ற நிலையியற் கட்டளை 22(1) முதல் (6) வரையின் பிரகாரம் பாராளுமன்ற அலுவல்களுக்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.
மு.ப 10.00 மணி முதல் மு.ப 11 மணிவரை வாய்மூல விடைக்கான கேள்விகளுக்காகவும், மு.ப 11 மணி முதல் மு.ப 11.30 மணி வரை நிலையியற் கட்டளை 27(2) கீழான கேள்விகளுக்காகவும் ஒதுக்கப்பட்டுள்ளது. அன்றையதினம் மு.ப 11.30 மணி முதல் பி.ப 5 மணி வரை கொழும்புத் துறைமுக நகரப் பொருளாதார ஆணைக்குழுச் சட்டத்தின் கீழான ஒழுங்குவிதிகள் விவாதிக்கப்பட்டு அங்கீகரிக்கப்படவுள்ளன.
இதன் பின்னர் பி.ப 5 மணி முதல் பி.ப 5.30 மணிவரை ஒத்திவைப்பு வேளையின் போதான வினாக்களுக்காகவும் ஒதுக்கப்பட்டுள்ளது. 19ஆம் திகதி வியாழக்கிழமை மு.ப 9.30 மணி முதல் மு.ப 10 மணிவரை பாராளுமன்ற நிலையியற் கட்டளை 22(1) முதல் (6) வரையின் பிரகாரம் பாராளுமன்ற அலுவல்களுக்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.
மு.ப 10 மணி முதல் மு.ப 11.00 மணிவரை வாய்மூல விடைக்கான கேள்விகளுக்காகவும், மு.ப 11.00 மணி முதல் மு.ப 11.30 மணி வரை நிலையியற் கட்டளை 27(2) கீழான கேள்விகளுக்காகவும் ஒதுக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து மு.ப 11.30 மணி முதல் பி.ப 5.30 மணிவரை எதிர்க்கட்சியினால் கொண்டுவரப்படும் உலகின் தற்பொது நிலவும் நிலைமை தொடர்பிலான சபை ஒத்திவைப்பு பிரேரணை மீதான விவாதம் இடம்பெறும்.
20 ஆம் திகதி வெள்ளிக்கிழமை மு.ப 9.30 மணி முதல் மு.ப 10.00 மணிவரை பாராளுமன்ற நிலையியற் கட்டளை 22(1) முதல் (6) வரையின் பிரகாரம் பாராளுமன்ற அலுவல்களுக்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.
மு.ப 10 மணி முதல் மு.ப 11 மணிவரை வாய்மூல விடைக்கான கேள்விகளுக்காகவும், மு.ப 11 மணி முதல் மு.ப 11.30 மணி வரை நிலையியற் கட்டளை 27(2) கீழான கேள்விகளுக்காகவும் ஒதுக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து மு.ப 11.30 மணி முதல் பி.ப 5.30 மணிவரை 19.03.2026 ஆம் திகதி எதிர்க்கட்சியினால் முன்வைக்கப்பட்ட உலகின் தற்பொது நிலவும் நிலைமை தொடர்பிலான சபை ஒத்திவைப்பு பிரேரணை மீதான விவாதம் இரண்டாவது நாளும் இடம்பெறவுள்ளது.





