இலங்கையின் தலைசிறந்த எழுத்தாளர், கவிஞர், பேச்சாளர், சமூக செயற்பாட்டாளர் என பன்முகத்தன்மை நிறைந்த மாத்தளை வடிவேலன் இன்று (11) காலமானார்.
இவர் எழுதிய பல சிறுகதைகள் மலையக சமூகத்துக்கான விடியலாக பார்க்கப்பட்டன.
இலங்கையின் இலக்கியத்துறைக்கு பெரும் பங்காற்றிய இவரது மறைவுக்கு எழுத்தாளர்களும் ஏனைய தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.



