கடலில் மீனவருக்கு நேர்ந்த விபத்து

இலங்கைக் கடற்கரைக்கு அப்பால் உள்ளூர் பல நாள் மீன்பிடிப் படகில் படுகாயமடைந்திருந்த ஒரு மீனவரை, நேற்று வியாழக்கிழமை  09  காலையில், கொழும்பு கடல் தேடல் மற்றும் மீட்பு ஒருங்கிணைப்பு மையத்துடன் இணைந்து, இலங்கை கடற்படையினரால் சிகிச்சை அளிப்பதற்காக அவசரமாகக் கரைக்குக் கொண்டு வரப்பட்டனர்.

2026 ஆம் ஆண்டு மார்ச் 21 ஆம் திகதி, தங்காலை மீன்பிடித் துறைமுகத்திலிருந்து 06 மீனவர்களை ஏற்றிச் சென்ற ‘ஹசிது புதா 1’ (IMUL-A-0485 TLE) என்ற பல நாள் மீன்பிடிக் படகு, இலங்கைக்குத் தெற்கே 149 கடல் மைல் தொலைவில் ஆழ்கடலில் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தபோது, படகில் இருந்த மீனவர்களில் ஒருவர் கடுமையான நெஞ்சு வலியின் காரணமாக உயிருக்கு ஆபத்தான நிலையில் நோய்வாய்ப்பட்டார்.

அதன்படி, மீனவரை சிகிச்சைக்காகக் கரைக்குக் கொண்டுவர கடற்படைக்குத் தேவையான உதவியை வழங்குமாறு, மீன்வளம் மற்றும் நீர்வளத் திணைக்களம், கொழும்பு கடற்படைத் தளத்தில் உள்ள கடல் தேடல் மற்றும் மீட்பு ஒருங்கிணைப்பு மையத்திற்கு அறிவித்ததுடன், கடற்படை உடனடியாகப் பதிலளித்து, உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த மீனவரை சிகிச்சைக்காகக் கரைக்குக் கொண்டுவர, தெற்கு கடற்படைக் கட்டளையகத்தைச் சேர்ந்த ஒரு கடற்படைக் கப்பலை அப்பகுதிக்கு அனுப்பியது.

அதனைத் தொடர்ந்து, உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த அந்த மீனவருக்குக் கடற்படையினர் அடிப்படை முதலுதவி அளித்து, அவரை உடனடியாக ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்குக் கொண்டு வந்தனர். அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக நேற்று ஹம்பாந்தோட்டை மாவட்டப் பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

மேலும், கொழும்பு கடற்படைத் தளத்தில் அமைந்துள்ள கடல் தேடல் மற்றும் மீட்பு ஒருங்கிணைப்பு மையத்தின் ஒருங்கிணைப்பின் மூலம், இலங்கை கடல் தேடல் மற்றும் மீட்பு வலயத்திற்குள் இடர்ப்பாட்டில் உள்ள கடல்சார் மற்றும் மீனவ சமூகத்தினருக்கு நிவாரணம் வழங்குவதற்காக கடற்படை தொடர்ந்து தயார் நிலையில் உள்ளது.