காலி – ஹிக்கடுவை துறைமுகத்திற்கு அருகிலுள்ள கடலில், நீராடச் சென்று கடல் அலையில் அடித்துச்செல்லப்பட்ட வெளிநாட்டுப் பிரஜை ஒருவர் வியாழக்கிழமை (05) பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளார்.
இதன்போது, குறித்த பகுதியில் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்த ஹிக்கடுவை பொலிஸ் உயிர் காக்கும் பிரிவைச் சேர்ந்த அதிகாரிகள் குறித்த நபரை பாதுகாப்பாக மீட்டு, அடிப்படை முதலுதவி அளித்துள்ளனர்.
மீட்கப்பட்டவர் 52 வயதுடைய ரஷ்ய நாட்டுப் பிரஜை என அடையாளம் காணப்பட்டுள்ளார்.



