கட்டுகஸ்தோட்டைப் பொலிஸார் மூன்று கஜமுத்துக்களுடன் ஒருவரைக் கைது செய்துள்ளனர்.
பொலிஸாருக்குக் கிடைத்த இரகசிய தகவல் ஒன்றின் படி மேற்படி கைது கட்டுகஸ்தோட்டையில் வைத்து இடம் பெற்றுள்ளது.
சந்தேக நபர் உகன பிரதேசத்தைச் சேர்ந்த 35 வயது நபர் எனப் பொலிஸார் தெரிவித்தனர். மேற்படி கஜமுத்து விலை உயர்ந்தது எனக் கூறப்படுகிறது.
தற்போது நாட்டில் காட்டு யானைகள் அதிகம் கொல்லப்படுவதன் காரணமாக மேற்படி கஜமுத்துக்கும் காட்டுயானைகள் கொள்ளப்படுவதற்கும் தொடர்புகள் உள்ளதா? என்ற அடிப்படையில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கோண்டுள்ளனர்.





