சுமார் 60 இலட்சம் ரூபாய் பெறுமதியான வெளிநாட்டு உற்பத்தியிலான சிகரெட்டுகளை இலங்கைக்குள் கடத்திவர முயன்ற குற்றச்சாட்டின் பேரில் இலங்கை பயணி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மினுவாங்கொடை – திவுலப்பிட்டி பகுதியைச் சேர்ந்த 30 வயதுடைய சந்தேகநபர், கட்டுநாயக்க விமான நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவின் அதிகாரிகளால் சனிக்கிழமை (08) கைது செய்யப்பட்டார்.
துபாயிலிருந்து வருகை தந்த சந்தேகநபர், தான் கொண்டு வந்த இரண்டு பயணப் பொதிகளுக்குள் இந்தச் சிகரெட்டுகளை மறைத்து வைத்து எடுத்துவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்தச் சிகரெட் தொகையுடன் விமான நிலையத்திலிருந்து வெளியேற முயன்றபோதே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதுடன், ஆகஸ்ட் 19 ஆம் திகதி நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.




