கன்னங்குடா பகுதியில் நோய்வாய்ப்பட்ட நிலையில் சஞ்சரிக்கும் காட்டு யானை

மட்டக்களப்பு மாவட்டம் வவுணதீவு பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட கன்னங்குடா பகுதியில் நோய்வாய்ப்பட்ட நிலையில் காட்டு யானை ஒன்று மக்கள குடியிருப்பை அண்மித்த பகுதியில் காணப்படுகின்றது.

வெள்ளிக்கிழமை (26) மாலை வேளை முதல் குறித்த யானை  வேறு எங்கும் நகர்ந்து செல்ல முடியாத நிலையில் குறித்த இடத்திலேயே நின்ற வண்ணம் உள்ளதாக அப்பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.

இதனிடையில் தமது பகுதிகளை காட்டுயானைகள் தினமும் துவம்சம் செய்து வரும் இந்நிலையில் கிராமத்திற்குள் ஊடுருவ முயற்சித்த இந்த யானை நோய்வாய்ப்பட்ட நிலையில் அவ்விடத்திலேயே நிற்கின்றது.

எனினும் அது ஒரு காட்டு விலங்கு என்ற ரீதியில் தாம் வாழை, தென்னை போன்ற உணவுகளை வழங்கி வருவதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில் அந்த காட்டு யானைக்கு வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் சிகிச்சை வழங்கி வருவதாகத் தெரிவிக்கின்றனர்.