களுத்துறை உள்நாட்டு வருவாய்த் திணைக்கள அலுவலகத்தில் தீ விபத்து

களுத்துறை உள்நாட்டு வருவாய்த் திணைக்களத்தின் மண்டல அலுவலகத்தில் வியாழக்கிழமை (30) இரவு தீ விபத்து ஏற்பட்டது.

அலுவலகத்தின் இரண்டாம் தளத்தில் உள்ள கணினித் தரவு அமைப்புப் பிரிவில் குறித்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

தீ விபத்துக்கான காரணம் அல்லது அதனால் ஏற்பட்ட சேதம் குறித்து இதுவரை குறிப்பிட்ட தகவல்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.

களுத்துறை நகர சபை தீயணைப்புத் துறை தற்போது தீயைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறமை குறிப்பிடத்தக்கது.