வல்வை ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலய வருடாந்த மஹோற்சவப் பெருவிழாவின் தீர்த்தத் திருவிழாவை முன்னிட்டு வல்வெட்டித்துறை மக்களால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த 59 ஆவது வல்வை இந்திர விழா வெள்ளிக்கிழமை (01.05.2026) இரவு மிகவும் சிறப்பாக இடம்பெற்றது.
ஊறணி முதல் ஊரிக்காடு வரையான மூன்று கிலோ மீற்றர் தூரம் வர்ண மின் அலங்காரங்கள், வானுயர் கட்டவுட்டுகள், பத்துக்கும் மேற்பட்ட மேடை நிகழ்ச்சிகள், இராட்சத முப் பரிமாண உருவங்கள், இராட்சத புகைக் கூண்டுகள் என வல்வை இந்திர விழா களைகட்டியது.






