கெஹெலியவின் உறவினர் கைது

முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவின்  உறவினரான பண்டார ரம்புக்வெல்ல கைது செய்யப்பட்டுள்ளார்.

இன்று அதிகாலை தன்னுடைய வீட்டில் வைத்து இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பண மோசடிக் குற்றச்சாட்டு

பண மோசடிக்  குற்றச்சாட்டின் கீழ்  இவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுக்களை விசாரிக்கும் ஆணைக்குழுவின் அதிகாரிகளால் வீட்டில் வைத்து அவர் கைது செய்யப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.