கோப்பாய் ஆசிரியர் கலாசாலையில் மாசி உத்தர நட்சத்திர நன்னாளான இன்று புதன்கிழமை (04.03.2026) திருவள்ளுவர் குருபூசை நிகழ்வு கலாசாலை முதல்வர் சந்திரமௌலீசன் லலீசன் தலைமையில் சிறப்பாக இடம்பெற்றது.
நிகழ்வில் கலாசாலை வளாகத்திலுள்ள திருவள்ளுவர் திருவுருவச் சிலைக்கு மலர் மாலைகள் அணிவிக்கப்பட்டும், மலர் வணக்கம் செலுத்தப்பட்டும் மரியாதை செலுத்தப்பட்டது. தொடர்ந்து கலாசாலையின் ரதிலட்சுமி மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்வில் யாழ்ப்பாணம் தேசிய கல்வியியல் கல்லூரியின் முன்னாள் விரிவுரையாளரும், தமிழ் அறிஞருமான கந்தையா தர்மராஜா அதிதிப் பேச்சாளராகக் கலந்துகொண்டு ‘வள்ளுவத்தைப் போற்றுவோம்’ எனும் தலைப்பில் சிறப்புரை ஆற்றினார்.






