இலங்கையின் அரச புலனாய்வு சேவையின் முன்னாள் பணிப்பாளர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலே கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
2019 ஆம் ஆண்டு இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல்கள் விசாரணைகள் தொடர்பாக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் அவர் கைது செய்யப்பட்டு, 90 நாள் தடுப்புக் காவல் உத்தரவின் கீழ் தடுத்து வைக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில், அவரது உடல்நிலை தொடர்பில் நீதவானின் கவனத்திற்குக் கொண்டுவரப்பட்டதைத் தொடர்ந்து, அவர் செவ்வாய்க்கிழமை (24) அவர் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.
பின்னர் முன்னெடுக்கப்பட்ட மருத்துவ பரிசோதனைகளின் அடிப்படையில், வைத்தியர் பரிந்துரையின் கீழ் தொடர்ந்து சிகிச்சை பெற அவர் தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.



